2025 மே 17, சனிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் சமூக சேவை உத்தியோகஸ்தர் பலி

Princiya Dixci   / 2015 மே 26 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.எல்.அப்துல் அஸீஸ்,எஸ்.சபேசன், எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ள  துப்பாக்கிச் சூட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டூரிலுள்ள தனது வீட்டிலிருந்தபோது, சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) என்ற இந்த உத்தியோகஸ்தர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே, அவர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .