2025 மே 17, சனிக்கிழமை

முச்சக்கரவண்டியுடன் பார ஊர்தி மோதி விபத்து

Suganthini Ratnam   / 2015 மே 28 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும்  பார ஊர்தி மோதியததால்,  முச்சக்கரவண்டியின் சாரதியான திருநாவுக்கரசு யோகராசா  படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ள இந்த விபத்தின்போது,  
திக்கோடை பிரதான வீதியால் களுவாஞ்சிக்குடி நோக்கி வந்த முச்சக்கரவண்டியுடன் அதே திசையிலிருந்து வந்துகொண்டிருந்த  பார ஊர்தியும் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .