Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 27 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மதுவரி நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.
உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு கல்லடியிலுள்ள மதுவரி நிலையத்திற்கு முன்னாள் மட்டக்களப்பு மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் 'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு, போதைப் பொருள் அற்ற நாட்டை உருவாக்க ஒன்றிணைவோம் வாரீர்' எனும் வசனங்கள் எழுதப்பட்ட விழிப்பூட்டும் பதாதையை தாங்கியிருந்ததுடன் பொது மக்களுக்கு பாதசாரிகளுக்கும் துண்டுப்பிரசுரங்களும் இதன் போது விநியோகிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மட்டக்களப்பு மதுவரி நிலையத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago