2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நல்லாட்சியின் கீழ் பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி

Suganthini Ratnam   / 2015 ஜூலை 23 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சியின் கீழ் தற்போது பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பெண்கள் அச்சம் இல்லாமல் நடமாடக்கூடிய சூழலும் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சித்தி சபீக்கா தெரிவித்தார்.

மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (21) மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே, அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நல்லாட்சியில் பெண்கள்  மதிக்கப்படுகின்றனர். ஆனால், கடந்த அரசாங்கத்தில் பெண்களுக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படவில்லை.  துன்பப்படும் நிலையிலேயே கடந்த அரசாங்கத்தில் பெண்கள் நடாத்தப்பட்டனர். இன்று அந்த நிலை இல்லை' என்றார்.

'எனவே, கடந்த அரசாங்கத்தில் நாம் எதிர்நோக்கிய கஷ்;டங்களும் துன்பங்களும் மேலும் வந்து விடாமல் பாதுகாக்க வேண்டுமாயின், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .