2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'கறுப்பு ஜுலை ஒரு பாடமாகும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 23 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

கறுப்பு ஜுலை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பாடமாகும் என்று  நாம் திராவிடர் கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

கறுப்பு ஜுலையை நினைவுகூர்ந்து 'கறுப்பு ஜுலை வேண்டாம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில்; இன்று வியாழக்கிழமை நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கறுப்பு ஜுலை  இனிமேலும் ஏற்படக்கூடாது. கறுப்பு ஜுலை என்;பது 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற கொடிய கலவரமாகும்.

ஜனநாயகமான முறையிலே தமிழர்களுக்குரிய அல்லது முஸ்லிம்களுக்குரிய அவர்களின் உரிமைகளையும் ஆட்சியில் பங்கேற்கும் விடயங்களையும் ஜனநாயக முறையில் பெற்றுக் கொள்வதற்காக நாம் இந்த நாம் திராவிடர் கட்சியை உருவாக்கியுள்ளோம்' என்றார்.

இந்த வைபவத்தில் நாம் திராவிடர் கட்சியைச் சேர்ந்த கே.தவராஜா, மற்றும் எஸ்.ரகுநாத், பிரஜைகள் சபையைச் சேர்ந்த ஏ.திருநாவுக்கரசு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .