Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியில் கைவிடப்பட்டிருந்த, பிறந்து 17 நாட்களேயான சிசுவை பேராதனை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (6) மாலை மீட்டுள்ளதுடன் சிசுவுக்கு அருகில் காணப்பட்ட கடிதமொன்றையும்; கண்டெடுத்துள்ளனர்.
பெண்ணொருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து பேராதெனை, தங்கொல்ல சந்தியில் இருந்து இச்சிசு மீட்கப்பட்டது.
கடிதத்தில், தமக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் குழந்தை பிறந்து 17 நாட்களே ஆவதாகவும் அதனை வளர்த்தெடுப்பதற்கு பொருளாதார பிரச்சினை இருப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாத எவருக்கேனும் இச்சிசுவை ஒப்படைக்கமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சிசுவின் தந்தை கூலித் தொழிலாளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சிசு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
26 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
50 minute ago
1 hours ago