2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் திறக்கப்பட்ட நகரங்கள்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன், ஆ.ரமேஸ்

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
மலையகத்தின் பெரும்பாலான நகரங்களில் அத்தியாவசிய தேவைக்கான வர்த்தக
நிலையங்கள் மாத்திரம் இன்று (23) திறந்திருந்தன.

இதற்கமைய, கினிகத்தேனை நகரில் மக்கள் நடமாட்டம் இல்லாவிடினும் தனியார்
கிளினிக் நிலையங்கள், பாமசிகள், வங்கிகள், தபால் நிலையம் என்பன திறந்திருந்தன.
அத்துடன்,தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில், சோதனை நடவடிக்கைகள்
பலப்படுத்தப்பட்டன.

தேவையற்ற பயணங்களை மேற்கொள்வோர்,குறித்த பொலிஸ் சோதனை சாவடியில்
வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதேவேளை, நுவரெலியா – கந்தப்பளை நகரிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சமையல் எரிவாளு முகவர் நிலையங்கள் என்பன திறக்கப்பட்டிருந்ததுடன், நடமாடும் வாகனங்கள் ஊடாக பழங்கள், மரக்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களும் விற்பனை செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X