Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரு மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளில் சிற்றூண்டிச்சாலைகளை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி, அவற்றைத் தரப்படுத்தி சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்துவதற்கு, இரத்தினபுரி மாவட்ட சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், மதிப்பூட்டுக்கு உட்படுத்தப்படும் சிற்றூண்டிச்சாலைகளுக்கு புள்ளிகள் வழங்கவும் அப்புள்ளிகளுக்கு இணங்க, A,B,C என வகைப்படுத்தி, அவற்றுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பவுள்ளதாகவும் சுகாதா சேவை அதிகாரி என்.எல்.ஆர். லியனகே தெரிவித்தார்.
அத்துடன், சான்றிதழ்களை வழங்கி, மாணவர்களுக்கு போஷாக்கு, சுத்தமான உணவுப்பொருள்களை வழங்குவதே, இத்திட்டத்தின் நோக்கம் என்றும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, பாடசாலை நிர்வாகங்கள், மேற்படி சிற்றூண்டிச் சாலைகளை முறையாக வசதியாக நடத்துவதற்கான அறிவுரை ஆலோசனைகள் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
1 hours ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
09 May 2026