2025 ஜூன் 25, புதன்கிழமை

அரசியல் அமைப்புச் சபையில் மூவின சமூகங்களும் உள்ளடக்கம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமிவேல் சுதர்ஷினி

இம்முறை அரசியல் அமைப்புச் சபைக்கு மூன்று சமூகங்களைப் பிரநிதித்துவப்படுத்தியே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிங்கள  சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையிலே வட, கிழக்கிலிருந்து தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அரசியல் அமைப்புச் சபைக்குள் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினர் நியமிக்கப்படாமை குறித்து அமைச்சரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியல் அமைப்புச் சபைக்குள் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  உறுப்பினர்கள் இல்லாவிடினும், அரசியல் அமைப்புச் சபையால் நியமிக்கப்படும் 9 ஆணைக்குழுவிலும் உறுப்பினர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும்போது, தகுதியானவர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .