Kogilavani / 2015 நவம்பர் 04 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பதுளை பிரதான பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள இறுவட்டு விற்பனை நிலையத்திலிருந்து 118 ஆபாச படங்கள் அடங்கிய இறுவட்டுகளையும் கணினி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதுடன் விற்பனை நிலையத்தின் உரிமையாளரையும் பதுளை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (03) கைதுசெய்துள்ளனர்.
பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த இறுவட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து இந்த ஆபாச இறுவட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .