2026 ஜனவரி 21, புதன்கிழமை

இலவச பாடநூல்களை வழங்க நடவடிக்கை

Ilango Bharathy   / 2021 ஜூன் 10 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

அண்மையில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு  காரணங்களால், தமது பாடநூல்களை இழந்த மாணவர்களுக்கு அவற்றை மீளவும் பெற்று கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்கத் தமது பாடநூல்களை இழந்த மாணவர்கள் தத்தமது பாடசாலை அதிபர்களின் ஊடாகத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு உட்பட கல்விக் காரியாலயங்கள் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X