Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
எம். செல்வராஜா / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பிரதேச சபைத் தலைவர் பி.எம்.அமில பஸ்நாயக்கவை, 30 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று (13) அனுமதி வழங்கினார்.
அத்தோடு, நீதிமன்றத்தால் குறிப்பிடப்படும் திகதியன்று, அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்றும் அதுவரை, மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிழல், எல்ல பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி, கையொப்பம் இடவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த 3ஆம் திகதி, எல்ல பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர், எல்ல உல்லாசத்துறை தகவல் மத்திய நிலையத்துக்குள் சென்று, முகாமையாளரைத் தாக்கி, நிலையத்தின் உடமைகளை சூறையாடியிருந்தனர்.
இது தொடர்பாக, எல்ல பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, 7 பேர், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பிரதேச சபைத் தலைவர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவர் இன்று (13), எல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, சரீரப்பிணை வழங்கப்பட்டது.
இந்த எட்டு பேரின் தாக்குதலுக்கு உள்ளான எல்ல உல்லாசத் துறை தகவல் மத்திய நிலைய முகாமையாளர் இந்திக்க செனவிரட்ன, பதுளை அரசினர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
4 hours ago
6 hours ago