2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஏ-9 வீதி தாழிறங்கியது

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹொமட் ஆஸிக்

கண்டி, யாழ்பாணம் ஏ-9 வீதியில் கடுகஸ்தோட்டை, அம்பதென்னவுக்கு இடைப்பட்ட பகுதி அதிக மழையினால் தாழிறங்கியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (27) இரவு பெய்த அதிக மழை காரணமாகவே வீதியின் ஒரு பகுதி 25 அடி ஆழத்துக்கு தாழிறங்கியுள்ளது.

குறித்த வீதியில், அப்பகுதியில்  மட்டும்  ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்கான நடவடிக்கையை கடுகஸ்தோட்டை பொலிஸார் எடுத்துள்ளனர்.

அத்துடன், அவ்விடத்தை செப்பனிடும் நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பாதையின் திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .