Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
சமையல் கலைஞர்களுக்கிடையிலான ஐஸ் கட்டியில் சிற்பம் செதுக்கும் போட்டியில், நுவரெலியா ‘அரலீய கிரீன் சிட்டி’ ஹோட்டல் சமையல் கலைஞர்கள், முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், நேற்று (18), நுவரெலியா கிரேன் ஹோட்டலில், சிற்பம் செதுக்கும் போட்டி இடம்பெற்றது. நாடளாவிய ரீதியிலுள்ள, சிறந்த சமையல் கலைஞர்கள் பங்குகொண்ட மேற்படி போட்டியில், முதலாம் இடத்தை, நுவரெலியா ‘அரலிய கிரீன் சிட்டி’ ஹோட்டல் சமையல் கலைஞர்களான ஜனக மற்றும் பந்து ஆகியோர், முதலாம் இடத்தையும், அம்பாந்தோட்டை ஹோட்டல் கலைஞரான எல்.எய்ச் அகேஷ் டி.சில்வா இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியின் சிறப்பு அதிதியாக, நுவரெலியா மாநகரசபையின் நகர பிதா சந்தனலால் கருணாதிலக உட்பட, பலர் கலந்துகொண்டனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago