R.Maheshwary / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஹப்புத்தளையில் ஒன்றரை வயதான ஆண்குழந்தையொன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹப்புத்தளையில் நேற்று (6) 28 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது, இதில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் ஒன்றரை வயது குழந்தையும் உள்ளடங்குவதாக பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் சுப்ரமணியம் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இக்குழந்தை சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், ஏனைய 18 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .