2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஓட்டோ விபத்தில் ஒருவர் பலி; ஒருவருக்குக் காயம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நாவலப்பிட்டி ரத்மிரப்பிட்டிய பகுதியில், ஓட்டோவொன்று வீதியை விட்டுவிலகிச் சென்று பள்ளத்தில் விழுந்ததில், 30 வயது நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஹரங்கல பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.புத்திக்க (வயது - 30) என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக மேற்படி நபரின் சடலம், நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

வேகக்கட்டுப்பாட்டை இழந்தே ஓட்டோ விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X