Janu / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிட்டது போல பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை போராட்டங்களின்றி அதிகரித்துள்ளோம் . எதிர்வரும் 10ஆம் திகதி நிச்சயமாக 1750 ரூபாய் நாற்சம்பளம் கிடைக்கும்” என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியினை நிறைவு செய்து வெளியேறும் 400 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (02) ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“ சம்பள அதிகரிப்பை தேசிய மக்கள் சக்தி அதிகரித்தது போல விரைவில் மலையக மக்களுக்கான காணி உறுதியும் நிச்சயமாக வழங்கப்படுவதோடு மக்களை கடந்த காலங்களில் ஏமாற்றி வந்தவர்கள் இப்போது எங்களை விமர்சனம் செய்கின்றார்கள். விமர்சனத்திற்கு நாம் அஞ்சுவதில்லை
மேலும் கடந்த காலத்தில் கல்வித்துறையில் அதிக அளவில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டது. அரச நியமனம், அரச அதிகாரிகளுக்கு தனித்துவமாக பணியாற்ற தடையிருந்தது ஆனால் நாங்கள் சுதந்திரமாக செயற்பட இடமளித்துள்ளோம். கடந்த காலங்களில் சிறந்த கல்வியாளர்கள் அரசியல் தலையீட்டால் தங்களது தகமைக்கேற்ற திறமைக்கேற்ற பதவிகளை வகிக்க முடியவில்லை. ஆனால் எங்களுடைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை. ஆகவே தற்போது போதைப்பொருள் மாப்பியாக்களை கைது செய்ய முடிகிறது.
கல்வி, மலையக சமூக விடிவின் இரு கண்கள். பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றுச்செல்லும் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.
கல்வித்துறையிலும் அரச சேவையிலும் அரசியல் தலையீடு இல்லை என்ற போதும் அதிகாரிகள் தங்களது சேவையை சரியாக மக்களுக்கு செய்யாது விடத்து எங்களது தலையீடு நிச்சயம் இருக்கும்.” என்றார்.



1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago