Yuganthini / 2017 ஜூன் 14 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற முறையற்ற கழிவகற்றல் முறையினால், பல்வேறு சுகாதார நெருக்கடிகளுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.
இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக, முறையான கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கான தேவை உணரப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தேவையான காணியை பெற்றுக் கொடுப்பதற்கு பிரதேசத்தின் இரு பெருந்தோட்டக் கம்பனிகள் மூலம் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இவ்விரு இடங்களிலும் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டங்கள் இரண்டை முன்னெடுப்பது தொடர்பில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவின் திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .