2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

Kogilavani   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக், சேன் செனவிரத்ன 

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்வத்த பகுதியில், நபரொருவர், நேற்று  (21) இரவு, கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த இக்னேஷ் கருணாரத்ன (வயது 37) என்பவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தந்தை, மகன் உறவுமுறையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X