Freelancer / 2023 மே 21 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்த கன மழையால் கென்யோன் நீர் தேக்கத்தில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8 மணி முதல் கென்யோன் நீர் மின் நிலைய பணியாளர்கள் மூலமாக இந்த நீர் தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் நீர் தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும் குழாய் வழியாக நீரை அகற்றி அந்த நீர் தேக்கத்தின் உள்ள அனைத்து குப்பைகள் அகற்ற பட்டு மீண்டும் நீர் நிரப்பும் பணி இடம் பெற்றது.
இதன் போது அந்த நீர் தேக்கத்தில் நிறைந்து கணப்பட்ட வனப் பகுதியில் இருந்து வந்த கழிவுகள் மற்றும் அப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களினால் வீசப்பட்ட பிலாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன் உறைகள் போன்றவை அகற்றி சுத்தபடுத்த பட்டது.
செ.தி.பெருமாள்




1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago