Kogilavani / 2021 மார்ச் 04 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி, கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகில், இன்று (4) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் ஹட்டனிலிருந்து நுவரெலியாவுக்குப் பயணித்த ஓட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டோ சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026