Ilango Bharathy / 2021 ஜூலை 26 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
”1000 ரூபாய் சம்பளத்துக்காக தொழிலாளர்கள் 20 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தைக் பறிக்க வேண்டும் என்ற மஸ்கெலியா கம்பனியின் நிர்ப்பந்தத்தை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மஸ்கெலியாவில் தொழிலாளர் தேசிய சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”மஸ்கெலியா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்துக்காக இதுவரை காலமும் 18 கிலோகிராம் தேயிலை கொழுந்தைப் பறித்து வந்தனர்.
ஆனால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களிடம் 20 கிலோகிராம் கொழுந்து பறித்தால் மாத்திரமே ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று நிர்பந்தித்து வருகின்றன. இந்த நிர்ப்பந்தத்தை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒருநாள் சம்பளத்துக்காக 18 கிலோவை தவிர ஒரு கிலோ கூட மேலதிகமாக கொழுந்தைத் தொழிலாளர்கள் பறிக்கப் போவதில்லை. இதற்குத் தொழிலாளர்கள் எவ்விதத்திலும் உடன் படப் போவதுமில்லை. இந்த நிலையில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் தொழிலாளர் தேசிய சங்கம் தொடர்ந்து போராடும்” என்றார்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026