Kogilavani / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கோவில் மணி கட்டப்பட்டிருந்த கயிறு இறுகியதில் 7 வயது சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்தச் சம்பவம், டிக்கோயா டங்கள் தோட்டத்தில், இன்று(11) காலை 10.30 இடம்பெற்றுள்ளது.
மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த டிலுக்சன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவன், கோவில் வளாகத்தில் விளையாடிக்கொண்டுருந்துள்ளார் என்றும் இதன்போது கோவில் மணி கட்டப்பட்டிருந்த கயிறு சிறுவனின் கழுத்தில் இறுகியதால் சிறுவன் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026