Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 23 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
சமூர்த்தி நிவாரணக் கொடுப்பனவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று, இரத்தினபுரி பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ரொஹான் சிசிரகுமார தெரிவித்தார்.
இரத்தினபுரி - கலபட தோட்டத்தில், நேற்று முன்தினம் (22) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களில் வாழும் மக்களில், சமூர்த்தி நிவாரணம் கிடைக்கத் தகுதியுள்ள, வறுமைக் கோட்டுக்கு கீழேவுள்ள பெரும்பாலான தோட்ட மக்களுக்கு, சமூர்த்தி நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றுத் தெரிவித்ததோடு, மாறாக சமூர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, எவ்விதத்திலும் தகுயில்லாத தனவந்தர்களுக்கே, முன்னுரிமை வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
சமூர்த்திக் கொடுப்பனவில் மாற்றங்கள் கொண்டுவரும் பட்சத்தில், தோட்ட மக்களும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
3 hours ago