Editorial / 2018 மே 17 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறந்து இரண்டு நாட்களேயானதாகக் கருதப்படும் சிசுவின் சடலத்தை, பெரகல சிங்காரவத்தை ஆற்றிலிருந்து, ஹப்புத்தளை பொலிஸார், நேற்று மாலை மீட்டுள்ளனர்.
மேற்படி ஆற்றுக்கு குளிக்கச்சென்ற நபர் ஒருவர், பொலிஸாருக்கு வழங்கியத் தகவலை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.
பண்டாரவளை நீதிவானின் உத்தரவுக்கமைய, பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சிசுவின் தாயை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .