Janu / 2024 மே 06 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கி, தலவாக்கலை கிளையினூடாக தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் தலவாக்கலை தேசிய பாடசாலைகளில் இலங்கை வங்கி சேமிப்பு பிரிவுகள் திறக்கப்பட்டன.
இலங்கை வங்கியின் நுவரெலியா பிரதேச பிராந்திய முகாமையாளர் பி.விஸ்வநாதன் மற்றும் இலங்கை வங்கி தலவாக்கலை கிளை முகாமையாளர் எம்.இராமன் ஆகியோரால் இந்த சேமிப்பு பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது .
மாணவர்களின் சேமிப்பு திறனை ஊக்குவிக்கும் முகமாக இந்த சேமிப்பு பிரிவுகள் பாடசாலைகளிலேயே திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பி.கேதீஸ்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .