2025 ஜூன் 25, புதன்கிழமை

சேவை செய்வேன் என நம்பியே மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர்: திகாம்பரம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான மலையக அரசியல் தலைவர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்களே தவிர, மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து வைக்கவில்லை என, மலையக புதிய கிராம, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில், மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரத்தை வரவேற்கும் நிகழ்வு, ஹட்டன் டி.கே.டப்ள்யூ கலாசார மண்டபத்தில் இன்று (15) இடம்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மலையக மக்கள் எனக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை என்னால் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே,  அதிகபடியான வாக்குகளை எனக்கு வழங்கியுள்ளனர்.

மலையக மக்களின் ஆலோசனைகளை கேட்டு நான் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளேன்.

தற்போது எனக்கு கிடைத்த அமைச்சு பதவியை வைத்து மக்களுக்குச் செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகளைத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .