Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 19 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
டிக்கோயா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 20 தனி வீடுகள், எதிர்வரும் டிசெம்பம் மாதம், மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படுமென்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு அவைமாக, 20 மில்லியன் ரூபாய் செலவில், டிக்கோயா தோட்டத்தில் 20 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வீடமைப்புத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், இந்தத் திட்டத்தின் வீடுகளை, டிசெம்பர் மாதம் இறுதிக்குள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago