2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலையில் கஞ்சா மீட்பு

Editorial   / 2018 மே 03 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.கேதீஸ்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தலவாக்கலை ஹொலிரூட் புதிய வீடமைப்பு கிராமத்தில், விற்பனைக்கு வைத்திருந்த 300 கிராம் கேரளா கஞ்சா பைக்கற்றுக்கள், ​நேற்று (02) பிற்பகல், தலவாக்கலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் மூன்றுபேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், குறித்த கஞ்சா பைக்கற்றுக்களை மீட்டுள்ளனர். இதுதொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும், நாளை (04), நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் ​மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X