Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தேர்தல் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நுவரெலியா மாவட்டத்தில் இந்தக் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் இதுவரை கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்தத் தேர்தலில் பணியாற்றிய உயரதிகாரிகளுக்கான கொடுப்பனவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கவனத்தில் கொண்டு, தங்களுக்கான கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ஆசிரியர்களும் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago