2026 ஜனவரி 21, புதன்கிழமை

தொற்றுக்குள்ளான நீதிமன்ற பதிவாளர் மரணம்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் உயிரிழந்துள்ளார் என, ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (4) மாலை இவர் உயிரிழந்துள்ளாரென்றும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பதிவாளருடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,  எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்துக்கு வருகைத் தருபவர்களுக்கு எழுமாறான என்டிஜன் பரிசோதனை செய்யப்படவுள்ளதென்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X