2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நீரோடையில் மூழ்கி மூன்று வயது குழந்தை பலி

இந்திக அருண குமார   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை ஒலகன்வத்த பிரதேசத்தில் நீரோடையில் மூழ்கி,   ஆண் குழந்தை (வயது 3) பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதென, மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

வெலியகொ, அகுரம்பட பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.கவிஷ்க தனஞ்சன் என்ற குழந்தையே, நேற்று (04) மாலை உயிரழந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

தனது பாட்டியுடன் நீரோடைக்குச் சென்ற மேற்படி குழந்தை, நீரோடையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X