Editorial / 2026 மார்ச் 02 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் இன்றும் உறைப்பனிப் பொழிவு காணப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே நுவரெலியாவில் இவ்வாறான உறைப்பனி நிலைமை நிலவி வரும் நிலையில், இன்றும் அதன் தாக்கம் தொடர்ந்தது.
குறிப்பாக, மாலை நேரங்களில் நிலவும் அதிகப்படியான குளிரைத் தொடர்ந்து, அதிகாலை வேளைகளில் புற்களின் மேல் உறைப்பனி அல்லது ‘உப்புப் பனி’ படர்ந்து காட்சியளிக்கிறது.
கடந்த காலங்களில் இத்தகைய உறைப்பனி நிலைமை அரிதாகவே காணப்பட்ட போதிலும், தற்போது இது தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.
இயற்கையின் இந்த மாற்றத்தை அனுபவிப்பதற்காக நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது.
(நன்றி)






1 hours ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026