2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நுவரெலியாவில் மர்ம நபர்

Editorial   / 2019 மே 18 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

நுவரெலியாவில், இன்று (18) காலை முதல், சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரை தேடும் வேட்டையில், நுவரெலியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நபரொருவர், நுவரெலியாவின் பிரபல உணவகமொன்று முன்னால், குளிர்பான போத்தலொன்றுடன் நடமாடிக்கொண்டிருந்ததாகவும் அதை வெகுநேரமாக அவதானித்த அங்குள்ள கடை உரிமையாளர் ஒருவர், இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்பின்னர், சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், குறித்த நகரப் பகுதியிலுள்ள சி.சி.ரீ.வீ காணொளிகளைப் பரிசோதித்த பின்னர், அந்நபரின் நடமாட்டம் குறித்து அறிந்துகொண்டதாகவும் எனினும் தற்போது அவரைத் தேடும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .