2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நூற்றாண்டு விழா

Kogilavani   / 2017 மார்ச் 21 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

இலங்கையில், பெண்கள் சாரணர் இயக்கம் ஆரம்பித்து நூறு வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி, நூற்றாண்டு விழா, இன்று செவ்வாய்க்கிழமை, கண்டி போகம்பறை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலிருந்து, 6,000 இற்கும் மேற்பட்ட பெண் சாரணர்கள் பங்கேற்ற்றனர்.  நிகழ்வின் ஆரம்பத்தில் பெண் சாரணர்களின்  ஊர்வலம், கண்டி அஸ்கிரிய மைதானத்திலிருந்து ஆரம்பமாகி, போம்பறை மைதானம் வரை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கண்டி மாவட்ட சாரணர் இயக்கத்தின் தலைவரும் இராணி சாரணர் பதக்கம் பெற்றவருமான மத்திய மாகாண முதமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

கண்டி பெண்கள் உயர் கல்லூரியில் ஆரம்ப காலத்தில், அதிபராகக் கடமையாற்றிய சென்சன் அம்மையார், 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி, இலங்கையில் தன் முறையாக பெண்கள் சாரணியத்தை ஆரம்பித்தார். அதனையடுத்து, அது படிப்படியாக வளர்ந்து இன்று நூறு வருடங்ளை எட்டிவிட்டதாக இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .