2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பண்டாரவளையில் நால்வருக்கு தொற்று

Kogilavani   / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பண்டாரவளையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (15) உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.

மேற்படிப் பகுதியில், கடந்த 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், நேற்று முன்தினம் வெளியான நிலையிலேயே நால்வருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக,  பண்டாரவளையிலுள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியை ஒருவருக்கும் அதே பாடசாலையைச் சேர்ந்த 16 வயது பெண் ஒருவருக்கும் முஸ்லிம் பள்ளிவாயலில்  ஊழியர் ஒருவருக்கும் பண்டாரவளை வெலிமடைப் பாதையில் அமைந்திருக்கும் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள ஒருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுளளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X