2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பதுளை நகரில் இருவருக்கு தொற்று

Kogilavani   / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பதுளை நகரின் மணிக்கூட்டு கோபுரத்தக்கு அருகில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கும் (வயது 49) அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக,  பதுளை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் அறிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையிலேயே இருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி இருவருடன் தொடர்பைப் பேணிய 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X