Freelancer / 2024 ஜூலை 13 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கினிகத்தேனை விகாரைக்கு அருகில் வியாழக்கிழமை இரவு புதையல் திருட வந்ததாக சந்தேகத்தின் பேரில் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கினிகத்தேனை பொலிஸ் அதிகாரியொருவர்,
கெனில்வொர்த் பிரதேசத்திலுள்ள பழைய ஆலயமொன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான குழுவொன்று தங்கியிருப்பதாக 119 அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கினிகத்தேன பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றதாக தெரிவித்தார்.
அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸார், அப்பகுதியில் ஒருவரைப் பிடித்து வைத்து, நடத்திய விசாரணையில், பூஜை நிமித்தம் இந்த இடத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை செய்ததில் 04 ஜெனரேட்டர் வயர்கள், 250 கிராம் துப்பாக்கி குண்டுகள், கல் உடைக்கும் கருவிகள், கம்பி வடங்கள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதிகாரி தெரிவித்தார்.
இந்தக் குழுவுடன் மற்றுமொரு குழுவினர் வந்துள்ளதாகவும், அந்தக் குழு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்ததையடுத்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
4 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago