2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொகவந்தலாவையில் அறுவருக்கு தொற்று

Gavitha   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயினா கீழ்ப்பிரிவு தோட்டத்தில், 6 பேருக்கு இன்று (01) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தோட்டத்தில், 28ஆம் திகதி, கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தாருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது.

அத்தோட்டத்தில் முதலில் இனங்காணப்பட்ட தொற்றாளர், பொகவந்தலாவ நகரிலுள்ள வர்த்தக நிலையத்துக்குச் சென்றமையால், வர்த்தக உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதுடன், அவருடன் தொடர்பைப் பேணி வந்தவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X