2025 மே 15, வியாழக்கிழமை

போயா தினத்தில் 33 பேர்கைது

Freelancer   / 2023 மார்ச் 08 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதின் போயா தினமான திங்கட்கிழமை (06) பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்கு வருகை தந்த  33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 4,5  மற்றும் 6 ஆம் திகதிகளில் சிவனொளிபாத மலைக்கு வருகை தந்த வாகனங்களை சோதனைக்கு உட்படுத்திய போதே போதைப் பொருட்களுடன் பயணித்த  33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 33 ​பேரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்த பொலிஸார், அவர்கள் அனைவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .