Janu / 2023 ஜூலை 24 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (23) நல்லிரவு முதல் கடும் காற்று உடன் கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நீர் தேக்க பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி தெரிவித்தார். குறிப்பாக மவுசாகல, காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன் லக்சபான பொல்பிட்டிய ,நவலக்சபான, விமலசுரேந்திர , ஆகிய நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடும் காற்று வீசுவதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு மழை பெய்து வருவதால் பெருந் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
58 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago