Janu / 2023 ஜூலை 09 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மஹியங்கனை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம் பெற்ற விபத்தில் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த 53 வயதுடைய வர்த்தகர் உயிரிழந்துள்ளார்.
மஹியங்கணை நகரில் வர்த்தக நிலையம் நடாத்தி வரும் மேற்படி காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மட் ஜெமீல் என்பவரே குறிபிட்ட சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தம்பான எனுமிடத்தில் பஸ் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறிப்பிட்ட நபர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (08 ) உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
25 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
3 hours ago