மொஹொமட் ஆஸிக் / 2018 மார்ச் 20 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதிப்பத்திரம் இன்றி, மஹோகனி உட்பட சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 56 மரக்குற்றிகளைக் கொண்டுசென்ற லொறியொன்றைச் சோதனையிட்ட பொலிஸார், அதன் சாரதியையும் நேற்று (19), கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டாரென்றும் பின்னர் அவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றும், பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் அவரை, எதிர்வரும் 26ஆம் திகதியன்று, கலகெதர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை, பூஜாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago