Editorial / 2018 ஜூலை 23 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
பெருந்தோட்டப் பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் அதிகமான ஓட்டோக்களில், கட்டண மீற்றர் பொருத்தப்படுவதில்லை என்றும் இதனால், ஓட்டோக்களை வாடகைக்கு அமர்த்திச் செல்வோரிடமிருந்து, அதிகளவான கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஓட்டோக்களில் மீற்றர் பொருத்துவது அவசியமென, அரசாங்கம் வலியுறுத்தியுள்ள போதிலும், பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள ஓட்டோ சாரதிகள், அது குறித்துக் கவனத்திற் கொள்வதில்லையென, பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .