2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் நால்வர் படுகாயம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

நானுஓயா  நாவலர் பாடசாலைக்கு திங்கட்கிழமை (12), முன்பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி,  20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்முச்சக்கர வண்டியில் 7 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் இவர்களில் நால்வர் காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்; ஏனையவர்கள் காயமின்றி தப்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X