Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரவிந்து விராஜ் அபயசிறி
மாத்தளை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளமையால்; மின்வேலி அமைப்பதற்கான திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி நடைமுறைப்படுத்தவுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸ் தெரிவித்தார்.
வில்கமுவ, லக்கல, பல்லேகம, தம்புள்ளை, நாவுல்ல, ஹலேவெல, மாத்தளை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையாலும் காட்டு யானைகளின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக வேண்டியே இதனை நடைமுறைப்படுத்த உள்ளதகாவும் அவர் மேலும் கூறினார்.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு படைப் பிரிவினரின் ஆலோசனைக்கமைவாக இந்த மின்வேலி அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
3 hours ago
6 hours ago