Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 18 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதலில் குரல் கொடுப்பவன் நானாகவே இருப்பேன் என, மலையக மக்கள் முன்னணி தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதை விடுத்து, அரசியல் இலாபத்துக்காக அவர் மீது குற்றம் சாட்டுவதையும் அவரக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காதெனவும், அவர் கூறினர்.
ஹட்டன் - வெளிஓயா மேற்பிரிவுத் தோட்டத்தில், சுதந்திரபுரம் வீடமைப்புத் திட்டத்தில், 30 குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு, 18.05.2019 அன்று இடம்பெற்றது. இதன் முதற்கட்டமாக 12 குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, அமைச்சர் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமானது, அமைச்சர் மீது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையாகும்.
அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றவர்களின் சதித் திட்டமாகவே இதனை மலையக மக்கள் முன்னணி பார்க்கின்றது. சிறுபான்மை கட்சிகளும் சிறுபான்மை மக்களும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.
அமைச்சர் ரிஷாட் பதியூதின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை குழு அமைக்கப்பட்டு அவர் மீது குற்றம் இணங்காணப்படும் பட்சத்தில் அதற்கு அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க தயாராக இருக்கின்றேன்.
அதைவிட்டு வெறுமனே வதந்திகள் மூலமாகவும் ஒவ்வோர் அரசியல்வாதிகளுக்கு தனது ஆதயத்தை தேடிக்கொள்ளும் நோக்கத்துடனும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
55 minute ago