2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

லொறி விபத்தில் இருவர் காயம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியாவிலுருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த மெகிநூடில்ஸ் விற்பனை செய்யும் லொறியானது, நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதியிலுள்ள ஆலயத்துக்கு அருகில்,  திங்கட்கிழமை இரவு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  சாரதியும், உதவியாளரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா வசந்தகால நிகழ்வுக்கு வருகைத்தந்த குறித்த பஸ், மீண்டும் நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போதே, இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதா, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில், நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .