2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

வீட்டின் பின்னால் குழந்தையின் சடலம்

Editorial   / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை, பல்லகெட்டுவ, கலபிடகந்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் பேரில், வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் சடலத்தை பல்லகெட்டுவ பொலிஸ் அதிகாரிகள் குழு மீட்டனர்.

சம்பவம் தொடர்பாக கலபிடகந்த பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டார். அவர், நான்கு குழந்தைகளின் தாயாவார். அவரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .