2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

Editorial   / 2025 நவம்பர் 21 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியுடன் பஸ் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நால்வரும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெண்ணும் இரண்டு ஆண்களும் 7 வயதான சிறுவனும் உள்ளடங்குகின்றனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த 45 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X